நிரம்பி வழிந்து ஓடுதே
nirambi vazhindhu odudhae
நிரம்பி வழிந்து ஓடுதே நன்மையும் கிருபையும் நாளெல்லாம் என்னை பின் தொடருதே காரணம் என்ன தெரியுமா இயேசு என்னில் வாழ்கிறார்
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படமாட்டேன் என்னை நேசிக்கும் தேவனவர் கூட வருவார்
2. சோர்ந்து போன ஆத்துமாவை தட்டி எழுப்பி இயேசு என்னை தேற்றிடுவாரே தினம் நீதியின் பாதையில் நடத்திடுவாரே
3. எதிரிகளை தாழ்த்தி என்னை உயர்த்தி நல்லதொரு விருந்து செய்தாரே என்னை தைலம் பூசி அபிஷேகித்து அணைத்துக் கொண்டாரே