நிறைந்தது எந்தன் பாத்திரம்
niraindhadhu endhan paathiram
1. நிறைந்தது எந்தன் பாத்திரம் பின்மாரி கால ஆசீர்வாதம் கரைக்கும் வெள்ளம் பெருகிடவே ஏற்றிடுவீர் எம் ஜெயக்கொடி
2. வெறுமையான் எந்தன் பாத்திரம் நித்தம் நான் தொடரும் பயணம் வெட்கம் பாதை செல்லும் வேளை நிறைத்திடுவீர் உன் அருளால்
3. உடைந்ததான எந்தன் பாத்திரம் உள்ளத்தின் ஆழ் துயரத்தால் உண்மையாய் என்னை அர்ப்பணிப்பேன் உருவாக்கிடுவீர் உம் தயவால்
4. கசிந்ததான எந்தன் பாத்திரம் நித்தம் என் ஆத்துமம் வாழ்வின் பானம் மாராவின் மாயை லோக வாழ்வில் காட்டுவீர் உன் நேச கரம்
5. துயரமான எந்தன் பாத்திரம் கல்வாரி மலை செல்லும் நேரம் கோர் சிலுவை பாரம் கண்டு நடத்திடுவார் உம் சித்தத்தினால்
6. பரிசுத்தமாக எந்தன் பாத்திரம் கறை, திறை இல்லா தூய வாழ்வாய் பத்திரமாக வருகை மட்டும் காத்திடுவீர் உந்தன் கிருபையால்
7.சுதந்தரமான எந்தன் பாத்திரம் மணவாளன் காக்கும் சிறப்பின் பங்கு சீயோனின் மாட்சி எந்தன் ஆவல் மறைத்திடுவீர் உன் செட்டை தனில்