நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
nesikkiren nesikkiren
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன்-2
1.பாரமான சிலுவையை எப்படி சுமந்தீரய்யா தடியால் உம்மை அடித்தபோது எப்படி சகித்தீரய்யா உம் முகத்தில் காரி துப்பினபோது எப்படி பொறுத்தீரய்யா என்னால் நினைத்துப்பார்க்க முடியலையே நீர் எப்படி தாங்கினீரோ
உம் அன்பிற்கு ஈடான அன்பை இந்த உலகத்தில் காணவில்லை உம் அன்பிற்கு ஈடான அன்பு இந்த உலகத்தில் எங்கும் இல்லை இதைவிட மேலாக அன்பு காட்ட யாருக்கும் முடிவதில்லை உம்மைப்போல என்னை இந்த உலகில் நேசிக்க எவரும் இல்லை-2
2.தாகம் என்று சொன்னபோது கசப்பு காடியை கொடுத்தனரே உம் வஸ்திரத்தை கிழித்தெரிந்து நிர்வாணம் ஆக்கினாரே முப்பத்தி ஒன்பது தடவை உம்மை கசையால் அடித்தனரே முள்முடி சூட்டி ஆணி அடித்த போதும் இவர்களை மன்னியும் என்றீர் அல்லோ
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் என் உயிர் உள்ள மட்டும் உம்மைத்தானே நான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் ஓ..இயேசுவை நேசிக்கிறேன் ஓ .. ஓ...இயேசுவை நேசிக்கிறேன்