நேசரே உம் நேச
nesarae um nesa
1. நேசரே உம் நேச நினைக்கையில் நெஞ்சம் உருகிடுதே நீசனும் என்னும் பாசத்தால் ஏற்றுக்கொண்டீர் அநாதி சிநேகத்தினால் காருண்யத்தால் இழுத்தீர்
நானல்ல நீரே ! தெரிந்தெடுத்தீரே என்னையும் உந்தன் அன்பினால் பிரிக்க இயலாதே யாதொன்றினாலுமே இவ்வன்பினின்றும் இயேசுவே!
2. பாவம் போக்கி பரிசுத்தனாக்க - உம் சன்னதியில் நிறுத்தி பரிசுத்தம் நீதியோடும் இயேசுவே உம்மையே யான் சேவிக்க அழைத்தீரன்றோ ஜீவிய காலமெல்லாம் - நான்
3. மாறிடா எம் சிநேகத்தால் மாற்றினீர் எந்தன் சாபமெல்லாம் உம் திரு சித்தம் போல் அழைத்தீரே என்னையும் ஆசீர்வதித்திடுவேன் ஆதர் மீதினிலே - நான்
4. ஊற்றினார் என் உள்ளத்தில் உம்மன்பை உன்னத ஆவியால் உன்னத உபதேசம் ஊழியரும் ஈவாய் உன்னதா உவந்தளித்தீர் உந்தனின் சாயலடைய - நான்
5. "வந்திடுவேன் சேர்த்திட உந்தனை” என்றுரைத்து சென்றீரே உந்தன் வாக்கதையே எண்ணியே நேசத்தினால் தவிக்குதே எந்தன் உள்ளமே வாரும் வேகம் இயேசுவே! - நான்