நேசர் இயேசுவே
nesar yesuvae
1. நேசர் இயேசுவே வந்திடுவார் தேவ இரகசியம் வானிலே தோன்றும் தேவ சேயராய் ஏங்கும் சுந்தரி தேவ சிங்காசனம் சேர மறைந்தேகுவார்
என்ன ஆனந்தம்! பேரின்பம்! என் நேசரை காண்பேன் நான் கண் இமைக்கும் பொழுதில் விண் மகிமையை அடைவேனே
2. இக லோகத்தில் பாடுகளே இனி வெளிப்படும் மகிமைக்கு இணையோ? இம்மை துன்பங்கள் வெல்லும் சுத்தரே இனிவரும் நல்ல பலன் நோக்கி ஓடுவான்
3. பூவில் கர்த்தரில் மரித்தோரெல்லாம் சாவை ஜெயித்தோராய் வேகம் எழும்புவார் மண்ணின் சாயலை பூவில் களைந்தே விண்ணின் சாயலாக வான் தனிலே ஜொலிப்பாரா
4. தூய ஆவியால் நடத்தப்பட்டோர் தூயர் கிறிஸ்துவின் நிறைவினை அடைவார் சத்யா சாட்சியாய் ஓட்டம் ஜெயித்தவர் நித்திய ஜீவ கிரீடம் சூடிடவே மறைவார்
5. அன்பில் குறைவற்ற பரிசுத்தரே அன்பர் சமூகத்தில் யுகாயுகம் வாழ்வார் அன்பு நேசரின் அடி தொடர்ந்தோர் இன்ப சுகம் கண்டு சீயோன் தனில் ஆளுவார்