நேச மீட்பர் பாவம் நீக்கி
nesa meetpar paavam neekki
1. நேச மீட்பர் பாவம் நீக்கி என்னைச் சுத்தமாக்கினார். அவர் திவ்ய அன்பில் மூழ்கி நித்தம் வாழ்ச் செய்கிறார். நேச நாதா! அல்லேலூயா! உம்மில் அன்பு கூருவேன் நேச நாதா! நீரே முந்தி அன்பு கூர்ந்தீர் தாங்குமே.
2. லோகம் எங்கும் இல்லா வாழ்வைக் கண்டு பாக்கியம் அடைந்தேன். சாகா ஜீவன் தந்த அன்பை எங்கும் யார்க்கும் சொல்லுவென். நேச நாதா! அல்லேலூயா! உம்மில் அன்பு கூருவேன் நேச நாதா! நீரே முந்தி அன்பு கூர்ந்தீர் தாங்குமே.
3. நேசர் அன்பின் சத்தம் கேட்டுப் பாசம் பொங்கிப் பணிந்தேன் அவர் பாதம் தாழ வீழ்ந்து ஜீவன் யாவும் படைத்தேன். நேச நாதா! அல்லேலூயா! உம்மில் அன்பு கூருவேன் நேச நாதா! நீரே முந்தி அன்பு கூர்ந்தீர் தாங்குமே.
4. மீட்பர் மந்தை சேர்ந்தோனாக அவர் சொந்தமாயினேன். மோசமின்றிச் சுகமாகக் காப்பார் என்று அறிவேன். நேச நாதா! அல்லேலூயா! உம்மில் அன்பு கூருவேன் நேச நாதா! நீரே முந்தி அன்பு கூர்ந்தீர் தாங்குமே.