நீரின்றி நான் உயிர்
neerindri naan uyir
நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே நீர்தானே என்றும் எந்தன் கேடகமே உயிரே நீர்தானே என் பெலனே நீரின்றி எதுவும் செய்ய இயலாதே நான் என்றும் நம்பும் கன்மலையே இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே)
1. என்னை நடத்தும் விதங்கள் மிகவும் அதிசயமானதே பாதையில் உம் கரம் என்னை விலாகமல் காக்குதே எனக்காய் நீர் செய்த நன்மைகள் ஆயிரமே என்ன நான் உமக்கு திருப்பி செலுத்திடுவேன்
2. என்னோடு பேசின வார்த்தைகள் எல்லாம் உயிருள்ள வார்த்தையே என் அழுகையை மாற்றியே களிகூர செய்ததே நீரே என்றென்றும் எந்தன் நல்லுறவே நீரன்றி வேறு இல்லை ஆதரவே