நீரில்லாமல் நானில்லை
neerillaamal naanillai
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா-உம் நினைவில்லாமல் வேறு இல்லை இயேசப்பா நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம்முண்டே நாதா நான் உம்மைவிட்டு எங்கே போவேன்
1.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல எந்தன் வழிகளும் உம் வழிகளல்ல இயேசுவே நீரே வழி சத்தியம் ஜீவன்-2 எந்நாளும் உமது பாதை தொடர்ந்து செல்லுவேன்
2.ஆவி ஆத்துமா சரீரம் யாவும் வாஞ்சித்து உம்மிலே கதறுகின்றதே இயேசுவே உமது ஜீவ வார்த்தைகள் -2 கால்களின் வெளிச்சமும் தீபமானதே
3.ஆயிரம் எண்ணங்கள் மனதினில் எழும்பும் ஆண்டவரே உம் விருப்பம் எனக்கு போதுமே ஆதரவின்றி தவிக்கின்ற உள்ளம் -2 ஆண்டவர் அன்பினில் மகிழ்ந்து பாடுமே
4.கிருபையின் தேவா கருணையின் நாதா காத்திடுமே உந்தன் அன்பின் சிறகினிலே இயேசுவே நீரே எந்தன் ஜீவன் -2 உமது மார்பினில் சாய்ந்து வாழுவேன்