நீரேயன்றி வேறே கதி
neereyandri verae kadhi
நீரேயன்றி வேறே கதி என் வாழ்வில் எதுவும் இல்லை என் தாயும் நீர்தான் என் தந்தை நீர்தான் என் சொந்தம் எல்லாமும் நீர்தான்
பகல் நேரம் நிழலாகி என்னை காக்கீறீர் இரவெல்லாம் ஒளியாகி என்னை ஆள்கீறீர் --(2) என் காவல் நீர்தான் என் ஆவல் நீர்தான் எந்நாளும் என் தோழன் நீர்தான்
கருவில் நான் உருவான நிலை கண்டீரே ஒருபோதும் விலகாமல் உடன் வாழ்கிறீர் --(2) என் ஜீவன் நீதான் என் மேய்ப்பர் நீர்தான் என்றென்றும் என் தேவன் நீர்தான்
அன்பாலே என்னை வென்று உமதுதாக்கினீர் என்றென்றும் எனில் வாழும் உயிராகினீர்--(2) என் பேச்சும் நீர்தான் என் மூச்சும் நீர்தான் நான் நம்பும் நம்பிக்கை நீர்தான்