நீர் சொன்னதை செய்பவர்
neer sonnadhai seybavar
நீர் சொன்னதை செய்பவர் சொல்லாததை தருபவர் என் தேவைகள் அறிந்தவர் முன்குறித்து வைத்தவர் உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
எதைக்குறித்தும் கலக்கமில்லை கைவிட நீர் ஒரு மனிதனில்லை யேகோவா நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
ஆதரவாய் எனக்கிருந்தீர் என் விளக்கை ஏற்றி வைத்தீர் எபிநேசராய் உடனிருந்தீர் இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
ஏற்ற வேளை எனக்கும் உண்டு காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு அமர்ந்திருப்பேன் உம் கரத்தில் உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்