நீர் செய்த நன்மைகள்
neer seydha nanmaigal
நீர் செய்த நன்மைகள் ஆயிரமன்றோ எதை எண்ணி பாடுவேன் நான் தோள் மீது சுமந்துட்ட உம் அன்பினை மறவாமல் நினைப்பேனே என் இயேசுவே
என் சுவாசமே என் நேசமே என் இன்பமே என் ஜீவனே என் இயேசுவே - என் அன்பரே
என் ஜீவனின் பெலனே என் வாழ்வின் ஆதாரமே மரிக்க நேர்ந்தாலும் பிழைத்திருந்தாலும் நீர் மாத்திரம் என் வாஞ்சையே தாழ்ந்திருந்தாலும் உயர்ந்திருந்தாலும் உமக்காய் வாழ்வது என் வாஞ்சையே
என் ஆத்ம நேசர் நீரே உறங்காமல் காத்தவரே தாயின் அன்பிலும் தந்தைக்கும் மேலாய் நேசித்ததை நான் மறப்பேனோ பொன்னும் வெள்ளியும் பேரும் புகழும் உமக்கு என்றும் ஈடாகுமோ