நீர் என்னில் வாசம் செய்யும் என் யேசு
neer ennil vaasam seyyum en yesu
1. நீர் என்னில் வாசம் செய்யும் என் யேசு ராஜாவே! என் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்திடுமே நீர் என்னில் வாசம் செய்து உம் வழி காண்பியும். என் மூலமாகத்தானே மகிமைப்படுமே.
2. என் சரீரம் படைத்தேன் நீர் சுத்திகரித்தீர் ஷேக்கின்னா மகிமையும் என்னில் ப்ரகாசிக்கும்; உமது முன் பூலோகம் மௌனமாய்ப் பணியும்; உமது ஊழியனாய் நான் என்றும் வாழுவேன்.
3. நீர் தந்த உறுப்புகள் உமக்கு அடிமை. நீர் சொல்லும் சித்தம் செய்ய அவை ஆயத்தமே; உமது பணி செய்ய ஓர் நாளும் குன்றாதே உமது அழைப்பிற்கு செவி சாய்த்திடுமே.
4. உம் பணிக்கு என் சேவை தேவைப்படுமானால் உம் விருப்பம் செய்யவே காத்திருக்கிறேன் நான். நீர் என்னில் வாசம் செய்யும் ஓ யேசு ராஜாவே! என் கேள்விகளுக்கெல்லாம் நீர்தானே பதிலே.