நீதிபரனேசுவே நீர் எங்கள்
needhibaranesuvae neer engal
1. நீதிபரனேசுவே நீர் எங்கள் ராஜா நித்திய மகிமைக்கு பாத்திரரே நன்றி நிறைந்தும்மைத் துதிக்கின்றோம் நீடூழியாய் உம்மை ஆராதிப்போம்
அல்லேலூயா! கர்த்தரை பாடுவேன் மகிமையாய் வெற்றி சிறந்தார் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் சர்வத்திலும் மேலானவர்
2. இயேசுவின் இரத்தத்தால் மன்னிக்கப்பட்ட நீதிமான்கள் தேவ ஜனமே ராஜாவின் ஜெயகெம்பீரத்துடன் இராஜாதி இராஜாவை வாழ்த்திடுவோம் - அல்லேலூயா!
3. என் நாமத்துக்கு பயப்படுவோர் மேல் நீதியின் சூரியன் உதிக்கும் சென்றீர் உந்தன் செட்டையின் கீழ் ஆரோக்கியம் துண்டு கொழுத்த கன்றுகளை வளர்த்திடுவோம் - அல்லேலூயா!
4. இன்று கண்டிடும் இந்தத் தீய வினை இனிமேல் எங்கும் காண்பதில்லை தேவன் நீதி செய்யும் வேளை இதுவே பயப்படாதே இன்றே ஜெயமடைவோம் -அல்லேலூயா!
5. சுத்தவான்களின் நீதிக்கிரியைகளாம் சுத்தப் பிரகாச ஆடை அணிவேன் நீதி பரிசுத்தம் நிறைந்தோராய் நித்ய மணாளனை சேர்ந்திடுவோம் -அல்லேலூயா!