நவ வருடம் நல்கினார் நாதர் யேசு நமக்கு
nava varudam nalginaar naadhar yesu namakku
1. நவ வருடம் நல்கினார் நாதர் யேசு நமக்கு ஜீவன் சுகம் அருள் தந்தார் துதி சொல்லிப் பணிவோம் போற்றுவோம் அநுதினமும் பூ மலர் சூடியே போற்றுவோம்! போற்றுவோம்! போற்றுவோம்!
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி மனமே! பூரீப்பாய் வான தூதருடன் பாடி வாழ்த்தி நீ கும்பிடு!
2. பல துன்பம் நாம் கடந்தோம் பரன் பாதை தொடர்ந்தோம் கலி தீமை சதி வென்றோம் கர்த்தர் மீட்பை யாம் கண்டோம் ஆற்றினீர் தயை காட்டினீர் தேற்றினீர் சென்றாண்டில் ஆற்றினீர்! ஆற்றினீர்! ஆற்றினீர்!
3. ஆவியின் கனி பெருக ஆண்டு எமை நடத்தி ஆத்மா புது பெலனாக அண்டி உமைப் பணிய ஆட்கொள்ளும் எமை அநுதினம் ஆண்டிடும் இவ்வாண்டில் ஆட்கொள்ளும்! ஆட்கொள்ளும்! ஆட்கொள்ளும்!
4. பசி பஞ்சம் அணுகாமல் படை சண்டை வராமல் பாதுகாத்துப் பாராட்டிடும் பரமனே! க்ருபையால் கையிடும் வேலையை எல்லாம் கர்த்தா! நீர் கண் பாரும். கண்பாரும்! கண்பாரும்! கண்பாரும்!