நற்கதிர் ஒளியாய் நம்மை யேசுவே
narkadhir oliyaay nammai yesuvae
1. நற்கதிர் ஒளியாய் நம்மை யேசுவே மாற்றுவார் நன்றாய் வீட்டில் விளையாட்டில் பள்ளியில் வீசுவோம்.
வீசுவோம் (2) நற்கதிர் ஒளியை நன்றாய் ஜொலிப்போம் (2) பாலர் நம் யேசுவுக்காய்.
2. அன்பின் விதையை விதைப்போம் எல்லா இடத்திலும் அயலார் மகிழ்வுறவே என்றுமே ஜீவிப்போம்.
3. இதயத்தில் பாவம் நீங்க யேசுவைக் கெஞ்சுவோம் யேசு நீதி ஜொலித்திட எம்மை கொடுக்கிறோம்.
4. யேசுவுக்காய் இங்கே ஜீவி எவ்வேளையிலுமே யேசுவுடன் மோட்ச வீட்டில் என்றுமே வாழ்வாயே.