நன்றிபலி செலுத்துவேன்
nandribali seluthuven
நன்றிபலி செலுத்துவேன் நன்மைகள் செய்தவரே - 2 என் வாழ்வின் எல்லைவரையில் உம்மை ஆராதிப்பேன் நான் வாழும் காலம் எல்லாம் உம்மை உயர்த்திடுவேன் - 2 எந்நாளும் எப்போதும் நான் உம்மை என்றும் உயர்த்துவேன்
நீரே நல்ல தேவன் உம்மை போல் யாரும் இல்ல நீரே வல்ல தேவன் உம்மை போல் எவரும் இல்ல - 2
1. தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை அறிந்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தீரே உயர்த்தி வைத்தீரே - 2
2. மரணஇருள் பள்ளதாக்குகளில் நடந்திட்ட நேரங்களில் கோலும் தடியுமாய் தேற்றினீரே என்னோடு இருந்தீரே - 2
3. வியாதி எனை சூழும் நேரத்திலே மரணத்தின் படுக்கையிலே- உம் தழும்புகளால் என்னை சுகமாக்கினீர் புதுஜீவன் எனக்கு தந்தீர் - 2