நன்றி நன்றி நன்றி இயேசுராஜா
nandri nandri nandri yesuraajaa
நன்றி நன்றி நன்றி இயேசுராஜா எங்கள் வாழ்வில் நன்மை செய்தீர் நன்றி இயேசு தேவா நல்லவரே வல்லவரே னன்மைகள் எனக்கு செய்தவரே செய்த நன்மை ஆயிரங்கள் எண்ணி எண்ணி உம்மை துதிப்பேன்
ஆபத்துக் காலத்தில் வேண்டுதல் கேட்டு விடுதலை தந்தீர் நன்றி ஆழ்கடல் நடுவிலும் சீறிடும் புயலிடும் அமைதியை கொடுத்தீர் நன்றி சீறிடும் புயலில் அமைதியை கொடுத்தீர் நன்றி -2
தாயை போல அன்பு வைத்து அரவணைத்தீர் நன்றி தந்தை போல என்னை தாங்கி சுமந்து கொண்டீர் நன்றி தாயை போல தேற்றினீரே நன்றி தந்தைப் போல சுமந்து கொண்டீரே நன்றி – 2
துன்ப நேரத்தில் துயரம் துடைத்து துணையாய் வந்தீர் நன்றி சோதனை வேளையில் சோர்வுகள் போக்கி புதுபெலன் தந்தீர் நன்றி துன்ப நேரத்தில் துணையாய் வந்தீர் நன்றி சோதனை வேளையில் பெலனை தந்தீர் நன்றி -2