நண்பனே அவரண்டை
nanbanae avarandai
நண்பனே அவரண்டை இன்றே நீ வருவாய் சொந்தக் குமாரனாக ஆக்கு வாரே உன் தந்தை தான் இயேசுவல்லோ!
1. நற்குல ஜாதியை நாடிடுவாய் தேற்றுவார் அவர் தம் வார்த்தையாலே திரு ரத்தமே கொண்டு இருதயம் கழுவி அருகே வைத்துக் கொள்வார் - ஜனமே - நண்
2. ஜீவிய நாளெல்லாம் போகிறதே பாவத்தின் அடிமையாய் கடந்திடாதே அன்பரைச் சேர்ந்திடும் அனுக்ரக காலம் அறிந்து வந்திடுவாய் - உடனே - நண்
3. சாற்றிய வாக்கெல்லாம் மாற்றிட்டாயே காட்டிய அன்பெல்லாம் இழந்திட்டாயே பரம் அழைப்பதையே திரும்பவே பெறுவாய் விரும்பி வந்திடுவாய் - மகனே - நண்
4. ரோகி நோய் யாவும் தீர்த்திட்டாரே வாக்கவர் பெலத்தையே பிடித்திடுவாய் கல்வாரி சிலுவையில் தொல்லைகள் தொலைத்த அருமை இயேசுவண்டை - வருவாய் - நான்
5. ஆருயிரீந்த வென் அன்பரையே பாரினில் வாழ்த்துவோம் நன்றியுடன் கண் இமை பொழுதில் மறுரூபமாக்கம் விண்ணில் மறையச் செய்வார் - எமையே - நண்