நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம்
nambikkai nangooram naan nambum theyvam
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம் நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம்
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே நீர் தானே
பார்வோனை வென்றவரை துதிப்போம் எகிப்தியரை வென்றவரை துதிப்போம் ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம்
கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் நீரூற்றைத் தந்தவரை துதிப்போம் பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம்
கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம் மரணத்தை வென்றவரைத் துதிப்போம் மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும் பயமின்றி முன்னேறிடுவோம்