நாங்க இரதங்களை
naanga iradhangalai
நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும் மேன்மையை பாராட்ட மாட்டோம் எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க சீனப் போட மாட்டோம்
எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம் எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்
தேவனை பற்றி சொல்ல தேசமெங்கிலும் செல்ல மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல மானின் கால்கள் எனக்கு அக்கினி இரதங்கள் இருக்கு ஆவியின் கண்கள் எனக்கு உலகத்தின் வேஷம் எதற்கு
பாவத்திற்கு மரித்தோம் பரிசுத்தத்திலே பிழைத்தோம் இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம் முழங்கால் யாவும் முடங்கும் நாவுகள் அறிக்கை செய்யும் கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் பூமி எங்கும் கேட்கும்
ஓடினாலும் இளைப்பில்ல நாங்க நடந்தாலும் சோர்வில்ல எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல நாணேற்றின வில்லும் கூர்மையான அம்பும் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்த பிடித்தோம்