நான் உம்மை மறந்தாலும்
naan ummai marandhaalum
நான் உம்மை மறந்தாலும் - நீர் என்னை மறப்பதில்லை என் நேசர் இயேசுவே நீர் எனக்கு போதுமே
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் - நான்
பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே வேத வசனமே என் பாதைக்கு தீபமே முடிவு பரியந்தம் வழி நடத்துமே - நான்
உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம் உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன் உந்தன் கிருபையே எனக்கு போதுமே என்னை என்றுமே நடத்திச் செல்லவே - நான்