நான் பாவச் சேற்றினிலே
naan paavas setrinilae
நான் பாவச் சேற்றினி லே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போடும் இயேசென்னைடாரே
என்நாவிலே புதுப்பாட்டுகள் என்றென்றும் கவிதாங்கிடும் மாசந்தோஷம் மறுபிறப்பித்து மன இருள் நீக்கினார்
1. என் ஆத்ம மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணினதால் சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய் சிந்தி இரட்சித்தாரே
2. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம் தூக்கி எறிந்தாரே
3. என் ஜென்ம கரும் பாவங்கள் எல்லாம் தொலைத்தாரே மன்னித்து என்றும் மறந்துவிட்டாரே மா பரமானந்தம்
4. இரத்தாம்பரம் போல் சிவப்பான இதய பாவங்களை பஞ்சையும் போலவே வெண்மைபமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்
5. மேற்குத் திசைக்கும் கிழக்குக்கும் மா எண்ணிலா தூரம் எந்தன் பாவங்கள் அத்தனை தூரம் இயேசு விலக்கினார்
6. நான் ஜலத்தினால் நல் ஆவியினால் நான் மறுபடியும் பிறந்தேன் தேவனின்ராஜ்யம் சேர்வதற்காக தேடிக்கொண்டேன் பாக்யம்
7. அங்கேயும் சீயோன் மலைமீதே ஆனந்த கீதங்களே ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ அன்பரைப் பாடிடுவேன்