நான் கலங்கினதை கண்டவரே
naan kalanginadhai kandavarae
நான் கலங்கினதை கண்டவரே என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே என் உள்ளம் உடைந்த போது என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர் நான் நம்பிக்கை இழந்த போது என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்
என் வாழ்வே நீர்தானையா என் இயேசுவே என் தெய்வமே - 2
உம் சிறகுகளின் நிழலை தந்தீர் உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் - 2 பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம் இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம் - 2
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் என்றுரைத்த துணையாளரே - 2 மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர் - 2