நான் ஆண்டவர்க்காய் காத்திருந்தேன்
naan aandavarkkaay kaathirundhen
நான் ஆண்டவர்க்காய் காத்திருந்தேன் பொறுமையுடன் காத்திருந்தேன் எனக்கு நன்மைகள் பல செய்தார் வெற்றி மேல் வெற்றி தந்தார் அல்லேலூயா ஆமென்
அழிவின் குழியிலிருந்து என்னை வெளியில் கொண்டு வந்தார் பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார் என்னை மகனாக மாற்றிவிட்டார் என்னை அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்
கற்பாறையின் மேல் நான் நிற்க செய்தார் என் காலடியை உறுதி செய்தார் புதிய பாடலை எனக்கு தந்தார் அவர் ஒளியை எனக்கு தந்தார் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்