நாம் தேவ சந்நிதானத்தில்
naam deva sannidhaanathil
1. நாம் தேவ சந்நிதானத்தில் மகா மகிழ்ச்சியாக வந்தாதி கர்த்தரண்டையில் வணக்கம் செய்வோமாக. யேகோவாவுக்கு நிகரார்? யுர்வும் நன்றாகச் செய்கிறார் கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
2. கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால் யாவற்றையும் நன்றாக ஸ்ருஷ்டித்துத் திட்டம் செய்ததால் மகா வணக்கமாக விண் மண் கடல் ஆகாசமும் விடாமல் துதி செலுத்தும் கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
3. மேலான அற்புதங்களை செய்தென்னை பூரிப்பாக்கி என்மேல் விழுந்த பாரத்தை இரக்கமாய் விலக்கி ரட்சித்த மா தயாபரர் துதிக்கு என்றும் பாத்திரர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி!
4. மெய் மார்க்கத்தாரே கர்த்தரை துதித்துக் கொண்டிருங்கள் அவர் சிறந்த நாமத்தை எந்நேரமும் தொழுங்கள். அவர் எல்லாம் படைத்தவர் கர்த்தாதி கர்த்தரானவர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி!