முழங்காலில் நின்று வீட்டை
muzhangaalil nindru veettai
முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு, ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு; -(2) துதியும் ஜெபமும் வேதவாசிப்பும், உனது இறக்கைகள், பரலோகம் மட்டும் பார் முழுவதும், பறந்து சென்றிடு; -(2) வாழ்ந்து மகிழ்ந்திடு, ஆமென் அல்லேலூயா-4
1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர், பிரியமாய் இருக்கின்றார், அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர், கரிசனையாய் இருக்கின்றார்; -(2) உன் வீடு நிலைநிற்கும், உன் குடும்பம் ஆசி பெறும் -(2) .......(முழங்காலில் நின்று)
2. கற்பாறை மீதினிலே உந்தன், வீட்டைக் கட்ட வேண்டும், வசனத்தின்படி வாழ்ந்து உந்தன், வீட்டைக் கட்ட வேண்டும்; -(2) குடும்ப ஜெபம் பண்ணிடணும், தனி ஜெபமும் பண்ணிடணும்; -(2) .......(முழங்காலில் நின்று)
3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம், பிதாவின் சித்தம் செய்ய வேண்டும், பரலோக பூலோக நன்மைகளை, சுதந்தரிக்க வேண்டும்; -(2) பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும், ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்; -(2) .......(முழங்காலில் நின்று)