மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே
megangal naduvae varappogum raajaavae
மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே உம்மை நான் வாழ்த்துகிறேன் உம்மை நான் வணங்குகின்றேன்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே
பரலோகம் திறந்திடும் நேரத்திலே மறுரூபமாகும் வேளையிலே பரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன் பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன்
நினையாத நாழிகை வரும் நாளிலே நித்தமும் காத்து விழித்திருப்பேன் மணவாளன் உம்மை நான் பார்க்கும் போது மறுரூபமாகி பறத்திடுவேன்
உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையா உன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யா நான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான் என் ஏக்கம் எல்லாமே உம்மோடுதான்