மறுரூப மலையின் அனுபவத்தில்
marurooba malaiyin anubavathil
மறுரூப மலையின் அனுபவத்தில் மகிமையில் இயேசுவை நான் பார்க்கின்றேன் அங்கு உனக்கொரு கூடாரம் போடுவேன் அதில் உம்மோடு என்றென்றும் வாழுவேன்
மறுரூப மலையில் கண்ட மகிமை என் மனதை அதினால் நிறைத்துக் கொண்டேன் மலையினின்று நான் இறங்கி விட்டேன் அந்த மகிமை என்னைவிட்டு இறங்கவில்லை
கன்மலை வெடிப்பினில் மறைந்து கொண்டேன் உன் காயங்களின் மறைவில் தஞ்சம் புகுந்தேன் உந்தனின் முகம் காண தகுதி பெற்றேன் அப்பா உம்மைப்போல் நான் மாற விருப்பம் கொண்டேன்