மரித்தோரை உயிர்பெற
marithorai uyirbera
மரித்தோரை உயிர்பெற செய்தவரே மனதுருக்கம் எங்கள் மேல் நிறைந்தவரே ஆராதனை துதி ஆராதனை -(2)
யேகோவா தேவன் பெரியவரே சகலமும் செய்திட வல்லவரே உலர்ந்திட்ட எலும்புகள் உயிர் அடையும் உன்னதர் ஆவியால் சேனையாகும்
நோய்கள் எல்லாம் நீங்கிவிடும் பேய்கள் எல்லாம் ஓடி விடும் சாபங்கள் எல்லாம் முறித்தவரே சாத்தானை நடுங்கிட செய்பவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் மகிமையும் மகத்துவம் நிறைந்தவரே மகிமையாய் எங்களில் வசிப்பவரே
குருடரின் கண்களைத் திறப்பவரே செவிடரை கேட்டிட செய்பவரே முடவரை நடக்கச் செய்பவரே முடியாதது உம்மால் எதுவுமில்லை