மரிப்பாயே ஒரு நாள்
marippaayae oru naal
மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா மரணம் வரும் ஒருநாள்
மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம் அழிந்தே போய்விடுமே – (2) மரிப்பாயே
ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும் நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2) அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும் பதில் சொல்ல வேண்டும் – (2) மரிப்பாயே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமான இயேசு வில் விசுவாசித்து (2) நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) மரிப்பாயே