மறவாதையும் என்னையும்
maravaadhaiyum ennaiyum
மறவாதையும் என்னையும் உம்மை பற்றினேனே இயேசையா - ஆஆஆஆ
யார் எனக்குண்டு இவ்வுலகில் உம்மை தவிர யாருண்டு நேசிப்பாருமில்லை தேற்றுவாருமில்லை அணைப்பாருமில்லயே-2
1. பெற்றோர் மறந்தாலும் மற்றோர் வெறுத்தாலும் உற்றோர் தள்ளினாலும் உலகம் பகைத்தாலும் உன்னை விட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை என்று சொல்லி நேசித்தீரே-2
2. கண்ணீர் நிறைந்தாலும் கஷ்டம் பெருகினாலும் துன்பம் வந்திட்டாலும் தொல்லை நெருக்கினாலும்-2 கலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று சொல்லி நேசித்தீரே-2
3. நிந்தனைக்குள்ளானாலும் நிம்மதி குறைந்தாலும் ஆறுதல் குறைந்தாலும் அன்பு தணிந்தாலும் வரைந்தேன் உள்ளங்கையில் உன்னை மறப்பதில்லை என்று சொல்லி அணைத்தீரே - 2