மரண இருளில் இருந்த
marana irulil irundha
மரண இருளில் இருந்த எமக்கு ஒளியைத் தந்தவர் யார்-இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்த இயேசு ஒருவர் தான்
பாவச் சேற்றில் எம்மை மீட்டுத் தூக்கி எடுத்தவர் யார்-தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்த இயேசு ஒருவர் தான்
தேவ சாயல் எமக்குத் தந்த தேவ மைந்தனும் யார்-இங்கு நாளும் நம்மை வழி நடத்தும் இயேசு ஒருவர் தான்
மாய உலகில் வாழும் நமக்கு வாழ்வைத் தந்தவர் யார்-எங்கள் ஆயனாக இங்கு வந்த இயேசு ஒருவர் தான்
திசைகள் மாறிச் சென்ற நமக்கு உதவி செய்தவர் யார்-என்றும் மேய்ப்பராகி வழியைக் காட்டும் இயேசு ஒருவர் தான்
மனித வாழ்வின் நடை முறைக்கு வழி வகுத்தவர் யார்-எம்மை மனந்திருப்பி அணைத்துக் கொண்ட இயேசு ஒருவர் தான்