மனுக்கோலம் ஏனோ மனுவேலனுக்கே
manukkolam eno manuvelanukke
மனுக்கோலம் ஏனோ மனுவேலனுக்கே மனுக்குலம் மீட்பதற்கு?
மகிமையும் விடவோ, மரிமகவானதோ? மகிமை! மகிமை! மகிமை!
பாவியாம் என்னையே பரமனும் எண்ணியே வினில் கந்தை அணிந்தோ, மகிமையும் தள்ளியே மனுவானீர் மண்ணிலே. மகிமை! மகிமை! மகிமை!
உன்னத மன்னனே! இந்நிலம் மீதிலே மன்னன் தான் தொட்டிலோ? என்னையும் சேர்க்கவோ ஏழையின் கோலமோ?) எடுத்தார் எடுத்தார் எடுத்தார்
பூவுலகிறையே பூவினில் உறைய புகலிடமும் அரிதோ ? மகத்துவம் இன்றியே மனுவாக தோன்றவே? மகிமை! மகிமை! மகிமை!
சுகத்தையும் உரிந்து, ஜெகத்தினில் உதித்து பகைஞருக்கு இறங்க, தூக்கமும் பசியும் தாங்கவும் அன்பினால் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
மகிமையும் கனமும் மகிபருக்கென்றுமே! ஆதி அந்தமும் அவனே மகத்துவமவர்க்கே! மாட்சிமை அன்பர்க்கே! மகிமை! மகிமை! மகிமை!