மண்ணோர்கள் போற்றிடும்
mannorgal potridum
மண்ணோர்கள் போற்றிடும் விண் வேந்தன் நம் இயேசு ஏழ்மை உருவில் வந்தார் ஓ..ஓ.. பூமியில் நிலை சமாதானமாகவே ஓ..ஓ.. மனிதர்மேல் அவர் அன்பு கொண்டு வந்தாரே
1. மாடடைக் கொட்டிலிலே முன்பனிக் காலத்திலே என் நேசர் கந்தைக் கோலமதாய்ப் பிறந்தார் மேய்ப்பர்கள் கலங்கவே விண் தூதர் உரைக்கவே பாவங்கள் போக்கிடும் நற்பாலன் அவதரித்தார்.
2. தீர்க்கர் மூவர் அறிந்தே பொன் வெள்ளி தூபம் கொண்டே பாராளும் வேந்தன் பொற்பாதம் போற்ற வந்தார் ஏரோதும் கலங்கவே ஆயர் தேடவே விண் வெள்ளி வழிகாட்ட மாமன்னன் அவதரித்தார்