மணவாளனே உம்மை
manavaalanae ummai
மணவாளனே உம்மை காண என் உள்ளம் ஏங்குதே என்று நான் பொன் முகம் காண்பேனோ அன்று தீரும் வேதனைகள்
எந்தன் இயேசு வானமீதில் வந்திடுவார் அதி வேகமே எந்தன் நேசர் கூட நானும் சென்றிடுவேன் அந்நேரமே வானில் எக்காளம் தொனிக்கும் நேரம் விண்ணில் நானும் சேருவேன்
1.அதி சந்தோஷமே என்ன பாக்யமே எந்தன் நேசரோடு வாழ்வது தொல்லை கஷ்டங்கள் துன்பம் இல்லை வியாதி வருத்தம் அங்கே இல்லை
2.சூர்ய சந்திரன் அங்கே இல்லை ராக்காலமும் அங்கே இல்லை கை வேலை இல்லா நித்திய வீட்டில் பசும் பொன் வீதியில் மகிழுவேன்
3.எந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் நாதா உம்முடன் வாழ்வதே ஆட்டு குட்டியின் இரத்தத்தாலே என்னை ஆயத்தப்படுத்திடும்.