மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
manasukkulle pongum kadalaay
மனசுக்குள்ளே பொங்கும் கடலாய் ஆனந்த நீர் ஊற்று! இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும் விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து! மீட்புதானே தேவன் வழங்கும் உன்னத சீர் அமைப்பு! - 2 இளமையிலே இந்த அற்புதம் விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! - 2 ஆனந்த பூமழையில் - தினம் பூரித்து நனைகின்றேன்! ஆவியின் அருள் மழையில் - மனம் நிரம்பியே வழிகின்றேன்!
1. மாசில்லாத புனித நல்வாழ்வே புத்தம் புது படைப்பு - நல் ரூபமாற்றமே அதனைக் காட்டிடும் அழகின் அணிவகுப்பு வாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால் “வெற்றிச் சிகரம் தொடும்” - அவர் அழகு வாசனை, சொல் வினையானால் உலகம் பாரட்டும்! .... 2 - ஆனந்த
2. நல்ல கிறிஸ்தவன் நாடறிய அவன் வாழ்க்கை வேறாகும்! நீதி நேர்மையும் உண்மை, நாணயம் அவன் விடும் மூச்சாகும்! தேவ ஆட்சியின் மாட்சி வலிமைதான்“அவனில் அரங்கேறும்” - தினம்சிலுவையை சுமந்து சீடன் நடந்தால் சீடரின் தொகை பெருகும்!... 2 - ஆனந்த
3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர் விடுக்கும் அறைகூவல்! ஆதியில் கொண்டஅன்புக்குத்திரும்பிட அழைக்கும் அன்புக்குரல்! ஊன் - உடல் உள்ளம் யாவும் படைத்தால் “ஆனந்தம் ஓயாது” இளைஞர் எழுச்சியால் சபைகள் வளரும் சரித்திரம் மாறிவிடும்!... 2 - ஆனந்த