மலைகளெல்லாம் விலகட்டும்
malaigalellaam vilagattum
மலைகளெல்லாம் விலகட்டும் பர்வதங்களும் அகலட்டும் கர்த்தரின் கிருபையோ என்னை தொடரட்டும்
1.தீங்கு நாளிலே கூடாரமறைவிலே மறைந்து என்னையே காத்துக்கொள்வாரே வாதை கூடாரம் அணுகிடாமலே பாதைகளெல்லாம் செவ்வையாக்குவார்
2.மரண இருளிலே பள்ளத்தாக்கிலே மார்போடு என்னை அனைத்துக்கொள்வாரே பொல்லாப்பு ஒன்றும் நேரிடாமலே பாதுகாத்தென்னை நடத்திடுவாரே
3.ஆபத்துக்காலத்திலே கூப்பிடும் போதெல்லாம் அனுகூலமான துணையுமானவர் யாக்கோபின் தேவன் என்னோடு இருப்பதால் கலங்கிடமாட்டேன் பயப்படமாட்டேன்
4.தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்னையே சேர்த்துக்கொள்வாரே கர்த்தரின் வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருந்து நான் மகிழ்திருப்பேன்