மாறாத நித்திய நோக்கத்தால்
maaraadha nithiya nokkathaal
மாறாத நித்திய நோக்கத்தால் இயேசுவே மண்ணில் எம்மைப் பிரித்தே மங்கா உந்தனின் சேவை எங்கும் செய்திடவே துங்கவன்! எம்மை கண் டீர்
அன்பிதுவே அன்பிதுவே - என்னை அழைத்த மா அன்பிதுவே அன்பில் பரிசுத்தனாய் என்னை நிறுத்த பிதா நினைத்த பேரன்பிதுவே
2. பாடுகள் சகிக்க தேவ ஜனத்தோடே பரனே! அன்பாய் அழைத்தீரே வீடும் நாடும் இனம் ஜனம் யாவும் மறந்து நாம் இயேசுவே! உம்மைப் பின் செல்ல,
3. சந்தோஷத்தோடே என் ஜீவனை ஊற்றிட சுவிசேஷ சேவையிலே நிந்தை அவமானம் தொல்லைகள் துன்பங்கள் துக்கங்கள் உந்தனுக்காய்ச் சுமந்தே
4. தூதரும் பெற்றிடத் தூய நல் சேவையைத் தாசர் எமக்களித்தீர் திவ்ய தூதுகள் அளித்தே சபையை வளர்த்திட தந்தா அப்போஸ்தலரை
5. பூவில் பிதாக்களை போல ஜீவித்தோர் எல்லாம் பொற்பரன் இயேசுவுடன் சீயோன் சிகரமதில் நின்று ஆளுகை செய்யும் நாள் சீக்கிரம் வந்திடுதே