மான்கால்களை தந்தீரையா
maangaalgalai thandheeraiyaa
மான்கால்களை தந்தீரையா மதில்களை தாண்டிடுவேன் நினைத்து பார்க்காத உயரங்கட்காய் நித்தமும் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
தீங்கு செய்ய நினைத்தவர் முன் தழைத்திட செய்தவரே தடுமாறின வேளையெல்லாம் தாங்கியே நடத்தினீரே
என் பக்கம் நிழலாய் நின்றவரே என் பாதம் இடறாமல் சுமந்தவரே
சிறுமைப்பட்ட காலமெல்லாம் சிதறாமல் காத்தவரே சீர்குலைந்த என் திட்டமெல்லாம் சீர் அமைத்து தந்தவரே
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய் என்று சொன்னதை நிறைவேற்றினீர்
எதிர்த்து வந்த ஜல பிரவாகம் அணுகிட விடவில்லையே துரத்தி வந்த ஜன கூட்டங்கள் அழித்திட விடவில்லையே
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர் இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்