மாமதுரை சென்று வந்தால்
maamadhurai sendru vandhaal
மாமதுரை சென்று வந்தால் என்ன நீ வேளாங்கண்ணி போய் வேண்டி வந்தால் என்ன திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன நல்ல மனம் வேண்டாமோ ஐயா வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா
மனதில் சாந்தி இல்லையே முகத்தில் சாயல் (அருளும்யில்லையே) இல்லையே நீ இயேசுவைப்போல் மாறவில்லையே
உன்னைப்போல் பிறரையும் நேசி நல் நேசர் சொன்ன வார்த்தைகளை பேசி உன் பகைவரையும் அன்புடன் நேசி நீயே மெய்யான விசுவாசி
கள்ள மார்க்கெட் பிஸினசூல நேசம் உன் பக்தியெல்லாம் வெறும் பகல் வேஷம் அதில் கெட்டதடா இந்த நல்ல தேசம் மனம் திரும்பாமல் போனாலோ மோசம்
கள்ளுக்கடை சாராய நாட்டம் நாட்டம் தினம் காலை முதல் மாலை வரை ஆட்டம் அட அப்பன் பாட்டன் ஆஸ்தி எல்லாம் ஓட்டம் பெண்டு பிள்ளை அடைந்திடுமே வாட்டம்
காப்பியிலே கலந்திருப்பதென்ன கடலை அளவை குறைத்து விற்பதென்ன அரிசியிலே கலக்கும் கற்கள் என்ன வெல்லத்திலும் புழுவெல்லாம் என்ன
ஒட்டுப் போட காசு கொடுப்பதென்ன லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன சுண்ணாம்பை நீ சோற்றில் சோற்றில் சேர்ப்பதென்ன கோள்ளை லாபம் அடிக்கத்துடிப்பதென்ன
தங்க சிலுவை சுமந்து திரிவதென்ன துன்ப சிலுவை சுமக்க மறுப்பதென்ன புதவி ஆசை பிடித்து அலைவதென்ன பக்தி மானாய் நடித்து வாழ்வதென்ன
திருச்சபையில் நடக்கும் குழப்பம் என்ன திருமுழுக்கு மீண்டும் பெறுவதென்ன மாய்மால வாழ்க்கை வாழ்வதென்ன நிலையில்லா விசுவாசம் என்ன