மாலை நீங்கும் நேரம்
maalai neengum neram
மாலை நீங்கும் நேரம் உம்மை காண நானும்
இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன்
பகலும் போனால் என்ன? இருளும் சூழ்ந்தால் என்ன? இயற்கை தீண்டினால் என்ன? அச்சம் நேர்ந்தால் என்ன?
நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ....நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு....ம்ம்.... சூழ்நிலையை கரைத்திடும்
மனிதன் போனால் என்ன? கைகள் விரித்தால் என்ன? நினைவுகள் வாட்டினால் என்ன? இமைகள் நனைந்தால் என்ன?
நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ....நீர் வேண்டும் இயேசுவே நீர் என்றென்றும் வேண்டும் உந்தன் அன்பு ம்ம்.... சூழ்நிலையை கரைத்திடும் எந்த சூழ்நிலையை கரைத்திடும் சூழ்நிலையை கரைத்திடும்