கோர சிலுவை தோளில் சுமந்து
kora siluvai tholil sumandhu
கோர சிலுவை தோளில் சுமந்து போகிறார் இயேசு அங்கே கண்டால் கல் கூட கனிந்து உருகும் உருகாதோ உன் மனமே
தேவமைந்தன் துய முகத்தில் காரி உமிழுந்திட்டானே - தம் கோரக் கரத்தால் பாவி ஒருவன் ஓங்கி அறைந்திட்டானே ஆதியில் உன்பால் தாம் கொண்ட அன்பால் ஆண்டவர் பொறுத்துக் கொண்டார் தம் மந்தையில் சேர்த்துக் கொண்டார்
பாரில் பாவம் தீர்ப்பதற்காய் தாழ்மையாகினார் மகிமை யாவும் துறந்தவராய் மனிதனாகினார் உன்னைக் கண்டார் அன்பு கொண்டார் நன்றி மறந்து நீயோ அவரை குருசில் அறைந்தாயே