கெட்டுப் போன மாந்தரை யேசு ஏற்றுக் கொள்ளுவார்
kettup pona maandharai yesu etruk kolluvaar
1. கெட்டுப் போன மாந்தரை யேசு ஏற்றுக் கொள்ளுவார். பாவ ஆத்துமாக்களை குணமாக்கி ரட்சிப்பார்.
நல்ல செய்தி! கேளுமே!யேசு ஏற்றுக் கொள்ளுவார்! நம்பி வாரும்! வாருமே!தள்ளிப்போடவே மாட்டார்!
2. "இளைப்பாறல் தருவேன் நம்பி வாரும்" என்கிறார். யாரானாலும் வாருமே!பாவப் பாரம் நீக்குவார்.
3. மாசில்லாத ரத்தத்தால் சர்வ சுத்தமாக்குவார் வல்ல தூய ஆவியால் தீய குணம் மாற்றுவார்.
4. இந்த ஏற்ற நேரத்தில் வந்து சேரக்கடவீர் புண்ய நாதர் பாதத்தில் மீட்பும் வாழ்வும் பெறுவீர்