கவிதை பாடுவேன் கானானின்
kavidhai paaduven kaanaanin
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக்கிடைக்காத தங்கம் இயேசு ராஜன் நாமத்தை பரலோக நாமத்தை
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம் பரிசுத்த பரமன் தங்கும் ஜீவ தேசம் மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்
பனிரெண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும் வச்சிரக்கல் இந்திரநீலம் சந்திரகாந்தம் மரகதம் கோமேதகம் பதுமராகம் சுவர்ணரத்தினம் படிகபச்சை புஷ்பராகம் வைடூரியம் சுநீரம் சுகந்தி ஆனந்தம்
நகரத்தின் வாசல் சுத்த பசும்பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் இரத்தின கற்களாம் சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை இரட்சிப்பின் ஜனங்களோ அதில் நடப்பார்களே தேவனே வெளிச்சமாம்