கர்த்தரின் சத்தம் கேட்டேன்
kartharin satham ketten
கர்த்தரின் சத்தம் கேட்டேன் என் கன்மலையானவர் அவர் சித்தம் செய்து விட்டேன் என் துணையுமானவர் - 2 உடைக்கப்பட்ட நேரத்திலே என்னை ஆதரிக்கும் நல்ல தெய்வம் நீரே உடைக்கப்பட்ட வேளைகளில் என்னை தேற்றிடும் நல்ல தெய்வம் நீரே
தடுமாறின வேளையில் என்னை தாங்கி நடத்தினீர் என்னை தூக்கி எறிந்தோர் மத்தியில் தூக்கி நிறுத்தினீர் கண்மணி போல என்னை காத்து நடத்தினீர் யாக்கோபை போல என்னை பெருக செய்திட்டீர்
எத்தனையோ கஷ்டங்கள் என்னை சூழ்ந்து வந்தாலும் என்னை தூக்கி எடுக்க நீர் இருக்க எனக்கு பயமில்லை - 2 வானம் பூமி ஒழிந்து மாறி போனாலும் உம் வார்த்தை என்றுமே மாறிடாதையா