கர்த்தர் இயேசு வருவார் நித்தம்
karthar yesu varuvaar nitham
கர்த்தர் இயேசு வருவார் - நித்தம் காத்து தவிக்கும் தேவ புத்திரர் களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே
1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில் மகிமை கிறிஸ்து வெளிப்படுவார் தூத தொனி ஆரவாரத்துடன் தேவ எக்காளம் முழங்கிடுமே
2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள் அமரர் வடிவாய் மாறிடுவோம் கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப பக்தர்களோடு பறந்திடுவோம்
3.தம் மணவாட்டி ஆயத்தமே துதியே செலுத்தி மகிழ்ந்திடவே நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம் ஜோதி இலங்க தரித்திடுவாள்
4. நூதன சாலேம் வந்திறங்கும் நடுவான் மீதில் அலங்கரிப்பாய் ஆட்டுக்குட்டியானவர் விருந்தே அன்று சந்தோஷ சுப மங்களம்
5.வெண்குதிரை மேல் ஏறி வந்தே கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே உண்மையும் சத்தியம் நிறைந்தே விண் மணவாளன் ஜெயமெடுப்பார்