கர்த்தர் உன்னை பெருகவும்
karthar unnai perugavum
கர்த்தர் உன்னை பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வார் வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடம்கொண்டு பெருகிடுவாய்
1.பெருக்கத்தின் தேவன் உன்னோடு உண்டு பலுகிபெருக உன்னை உயர்த்திடுவார் வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார்
2.வானத்தின் பலகணியை திறக்கும் தேவன் உண்டு வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இருப்பு (இரும்பு) தாழ்ப்பாளை முறித்திடுவார் பொக்கிஷங்களை தந்திடுவார்
3.கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டு சமாதானத்தால் என்னை நிரப்பிடுவார் ஸ்தோத்திரத்தினால் பெருகிடுமே விசுவாசத்தால் பெருகிடுமே