கர்த்தர் பயத்துடனே நடப்பேன்
karthar payathudanae nadappen
கர்த்தர் பயத்துடனே-நடப்பேன் எவனும் பாக்கியவான்,
1. உந்தனின் கையின் பிரயாசம் புசிப்பாய் நீயே நித்தமுமே, பாக்கியம் உண்டாகும் உனக்காமே.
2. உந்தன் மனையின் ஓரங்களில் மனைவி திராட்சைக் கொடியது போல் கனியைத் தருவாள் நின் மனம் போல்
3. உந்தன் பந்தியைச் சுற்றிலும் பிள்ளைகள் ஒலிக் கன்றுகள் போல் வளர்வார். நதியின் மரங்களைப் போல்.
4. உந்தன் கண்கள் கண்டிடுமே சாலேமின் வாழ்வை மகிழ்வுடனே, சீயோனில் தேவ அருள் அடைவாய்.
5. உந்தன் கண்கள் கண்டிடுமே சந்தானம் விருத்தி அடைவதையும், யாக்கோபின் சாலேம் வாழ்வதும்,
6. கர்த்தருக்கு பயப்படும் மனுஷன் கர்த்தர் ஆசீர் அடைந்திடுவேன், கர்த்தரில் நித்தமும் மகிழ்ந்திடுவேன்