கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன்
karthar mel nambikkai vaippavan
1. கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும் பூரண சமாதானம் சந்தோஷமடைவான் பூவில் அவனே பாக்கியவான்
பரிசுத்தர்களே பரன் இயேசுவிலே பாடி மகிழ்ந்து களி கூறுங்கள் பரலோகத்திலே பலன் ஏராளமே பாக்கியம் பெற்றவர்கள் நீங்களே
2. கர்த்தரின் வழிகளில் நடப்போனும் கர்த்தர் உத்தமமாய் ஜீவிப்போம் அளவில்லாத கிருபைகள் பெறுவான் அவனே என்றும் பாக்கியவான்
3. உம்மில் பெலன் கொள்ளும் மனுஷனும் உள்ளத்தில் செவ்வை வழி கொண்டவனும் உன்னதர் அன்பினில் பூரணமடைவான் உண்மையிலவன் பாக்கியவான்
4. சோதனையை தினம் சகிப்போனும் சோதித்தறிந்த பின்பு உத்தமனும் வாடிடாத ஜீவ கிரீடத்தை பெறுவான் வானிலே அவன் பாக்கியவான்
5. அன்பில் பரிசுத்தமுள்ளவன் ஆவியில் எளிமையுமானவன் சுத்தாங்கம் இருதயத்தில் பெற்றவனெவனும் சுத்தர் இயேசுவை போலாவான்