கர்த்தர் மாறா வாக்குத்தத்தங்கள்
karthar maaraa vaakkuthathangal
கர்த்தர் மாறா வாக்குத்தத்தங்கள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கர்த்தருக்கு பயந்திடும் - மனிதன் எவனும் பாக்கியவான்
1. சீயோனிலிருந்து கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உயர்த்திடுவார் இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே தந்திடுவேன் என்றாரே
2. உன்னைத் தொடுவோன் தன் கண்மணியை தொடுவதாக சொன்னாரே உன்னை தமது உள்ளங்கையில் வரைந்து விட்டேன் என்றாரே
3. வானமும் பூமியும் ஒழிந்து போகும் கர்த்தரின் வார்த்தை ஒழியாதே ஜீவனுள்ள வார்த்தையினால் போஷித்து தினமும் காத்திடுவார்